Monday, May 30, 2016

தாய்மைக்கால பராமரிப்பு

தாய்மை அடைந்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான எளிய தீர்வுகளை, அறிவியல் வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்தில் சித்தர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றனர்.

"பிலமாக முதல்மாதங் கெர்ப்பமாகிற்
பெண்வயிறு நொந்திட்டால் மருந்து கேளு
சிலைநுதலே சந்தனமு மிலாமிச் சோடு
சேர்த்து நீ சமன் பாலில் கரைத்துக் கொள்ள
விலகாமல் ஆரோகங்கள் வயிறு நொந்தால்
வெள்ளோத்திரம் நெய்தல் கிழங்கு மஞ்சிட்டி
துளையாதே நீயரைத்து பாலில் கொள்ள
சுகமாகு மூன்றாந் திங்கள் கேளே"

- அகத்தியர் -

தாய்மை அடைந்த முதல் மாதத்தில் வயிறு வலித்தால், சந்தனம் மற்றும் இலாமிச்சை வேரைச் சமனளவு சேர்த்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும். வலி நீங்காது இருப்பின், வெள்ளி லோத்திரம், நெய்தல் கிழங்கு, மஞ்சிட்டி, இவற்றை சேர்த்தரைத்து பாலில் கொடுக்க குணமாகும்.

மூன்றாம் மாதத்தில் வயிறு வலித்தால் சீரகம், தாமரை வளையம், கச்சேலம், சந்தனம் இவற்றை பாலில் அரைத்துக் கொடுக்க குணமாகும்.

நான்காம் மாதத்தில் வயிறு வலித்தால் நெருஞ்சி வேருடன் வாழைக்கட்டை, தாமரை, நெய்தல்வேர், சந்தனம் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஐந்தாம் மாதத்தில் தோன்றும் சூலை வலிக்கு சந்தனம், நெய்தல்வேர் இவற்றை பசும் பாலில் சேர்த்துக் கொடுக்க குணமாகும்.

ஆறாம் மாதத்தில் ஏற்படும் வயிறு வலிக்கு காட்டிலுள்ள விளாங்காயின் சாற்றையும், நெய்தல் வேரையும், இடித்து சக்கரை, பால் கலந்து கொடுக்க குணமாகும்.

எட்டாம் மாதத்தில் வரும் வலிக்கு காரையிலை, சந்தனம், வெட்டிவேர், திப்பிலி ஆகிய மூலிகைகளை அரைத்து பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.

இவை மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தை அழகாகவும், நீடித்த ஆயுளுடனும், திடகாத்திரமாகவும் பிறக்க பல்வேறு வழிமுறைகளை சித்தர்கள் அருளிச் சென்றுள்ளனர்.

தாய்மை அடைதல்.!

தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.

ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.

இனி தாய்மை அடைதல் குறித்த சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு இருக்கிறது என பார்ப்போம்.

நிஜத்தில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர். மேலும் பெண்களிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தால் தாய்மை அடைவதில் தடையாகும் என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்.

"இசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை
எதுனால் மலபான சேதி கேளு கேளு
அசைந்திருக்கும் பேயினால் பூதத் தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாய்வி னாலும்
பிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும்
பிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந்
துசங்கட்டிக் கல்வியினால் பூலவா துங்கித்
துலங்காமல் கெர்ப்பமில்லைசொல்லக் கேளே"

- அகத்தியர் -

இந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை., பேய், பூதம், அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவகளால் கர்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும் அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.

நாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசுவெண்ணெய் பாக்களவு சேர்த்து மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வேப்பம் பூ, சீந்தில்தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி காலை மாலை இரண்டு வேளையும், மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.

பெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அதைப் பெண்கள் மாதவிலக்கு முடிந்து தலை முழுக்கும் நாள் முதல் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்பப்பூச்சி, தோடம், விடக்கிரம் ஆகியவையும் தீரும் என்கிறார். இதற்க்கும் எந்த பத்தியமும் சொல்லப்பட வில்லை.

இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களையும் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நாகதோஷப் பொருத்தம் பார்ப்பது அவசியம்

பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன.
அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச் சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது.
நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். இப்போது நாகதோஷத்தைப் பற்றியும் அதற்கான பரிகார பலன் களையும் பார்ப்போம். நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. அவைகளுக்குச் சொந்த வீடு கிடையாது.
எந்த வீட்டில் இருக்கிறார்களோ, அந்த வீட்டுக்குரியவனின் ஆற்றலை அதிகப்படுத்துவார்கள் அல்லது குறைப்பார்கள். இதனைத்தான் உச்ச, நீச்ச வீடு என்று குறிப்பிடுவார்கள். இந்த உச்ச, நீச்ச வீடுகளைப் பற்றி ஜோதிடர்களிடையே அபிப்ராய பேதங்கள் உண்டு. அதனால் ஒருவர் உபயோகப்படுத்தும் பங்சாங்கத்தின் படி, உச்ச நீச்சத்தை பின்பற்றலாம். ராகு, கேதுவினால் ஏற்படும் தோஷம், நாக தோஷமாகும்.
அதாவது ராகு, கேதுவின் ஒளிக்கற்றை அல்லது கிரணங்களால் ஏற்படும் பாதிப்பைத் தான் நாகதோஷம் என்கிறோம். இந்து சமயத்தின்படி, நாகங்களுக்கு கேடு விளைவித்தால் ஏற்படும் தோஷமாக நாகதோஷம் அறியப்படுகிறது. நாக தோஷமானது, ராகு தோஷம், கேது தோஷம், சர்ப்ப தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜனன கால ஜாதகத்தின்படி, லக்னம் இருக்கும் இடம், முதலாம் இடம். முதலாம் இடத்திலோ, குடும்பஸ்தானம் என்று சொல்லப்படும் 2-ஆம் இடத்திலோ, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்திலோ, களத்திர ஸ்தானமான 7-ஆம் இடத்திலோ, ஆயுள் ஸ்தானமான 8-ஆம் இடத்திலோ, விரைய ஸ்தானமான 12-ஆம் இடத்திலோ, ராகுவோ, கேதுவோ இருந்தால் நாகதோஷம் என்று அர்த்தம்.
1,2,5, 7, 8, 12 – ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் நாக தோஷம் என்று எளிதாகப் புரிந்து கொள்ளுங்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்கு, நல்ல தசாபுத்தி காலங்களிலும் கூட, நல்ல பலன்கள் கிட்டாது. ராகு, கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால், பலவீனமாக இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டும்.
இதனை அம்மன் அருள் பெற்று, பலவீனமானவற்றை பலப்படுத்த ஆக்டிவேஷன் என்ற உத்திரயை பயன்படுத்துகிறோம். பாதகமான கிரகங்கள் பலம் பெற்று இருந்தால், (ராகு, கேது உட்பட) அதனை பலவீனப்படுத்த, ஆர்டிவேஷன் செய்கிறோம். இதனால் பலர் பலன்பெற்றிருக்கிறார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மை.
ஒன்று முதல் பன்னிரண்டு இடங்களில் ராகு, கேது இருந்தால், என்னென்ன பொதுப்பலன்கள் என்பதைப் பார்ப்போம். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தின் படி, லக்னத்தில் அதாவது முதலாவது இடத்தில் ராகு, கேது இவற்றில் ஏதாவது ஒன்றிருந்தாலும், அந்த ஜாதகத்தின் படி, அவர் செல்வந்தர் ஆவார்.
இருப்பினும் வியாதியால் தொல்லைள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கண்டிப்பாக புத்திர பாக்கியம் இருக்கும். 2-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், நடுத்தர வயதில் யோகங்கள் கிட்டும். இருதார யோகம் உண்டு. பொதுவாக எப்போதும் ஏதாவது ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
3-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதாவது ஒன்று இருந்தால், அந்த ஜாதகர் தைரியசாலியாகவும், மகாலட்சுமியின் கடாட்சம் பெற்றவராகவும் இருப்பர். 4-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், அந்த ஜாதகத் குறுகிய எண்ணம் உடையவராகவும், நன்னெறியில் நம்பிக்கை இல்லாதவராகவும் இருந்தாலும், பிறர்பால் தரிசனம் உண்ணவராகவும் இருப்பர்.
5-ஆம் இடத்தில் ராகு இருந்தால் பித்ரு சாபம், புத்திர தோஷம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டு, எந்தக் காரியத்தைத் தொட்டாலும், அதில் தடை ஏற்படும். 6-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், நிலையான யோகம் பெற்றவராக ஜாதகர் இருப்பர்.
பெண்களை வசீகரித்து, மகிழ்விக்கும் படி நடந்து கொள்வர். 7-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், நீரினால் பாதிப்பு உண்டாகும். கலைகளில் சிறந்து விளங்குவர். இருதார யோகம் உண்டு. 8-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், பிற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையைப் பொறுத்தே பலன்கள் இருக்கும்.
9-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், யோகங்களைக் கெடுக்கும். பெற்றோரோடு ஒத்துப் போகாது. தெய்வ வழிபாடு குன்றி, சண்டை, சச்சரவுகள் உறவினர்களோடு தொடர்ந்து கொண்டே இருக்கும். 10-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதாவது ஒன்றிருந்தால், பணத்திற்கு பஞ்சமே இருக்காது. செய்தொழில் சிறப்பாக நடக்கும்.
11-ஆம் இடத்தில் ராகு இருந்தால், நிறைந்த யோகம் உண்டு. பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். தப்பான வழிகளில் கூட, சரியாக பணம் வந்து சேரும். 12-ஆம் இடத்தில் கேது இருந்தால் அடுத்த பிறவி கிடையாது என்று சொல்வார்கள். ராகு, கேது இங்கு மறைந்தால் கஷ்டங்களை கொடுப்பார் என்றும் சொல்லிவிட முடியாது.
இந்த ஜாதகர்களுக்கு, வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தில் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு தோன்றும். மேலே நாம் சொன்னது அனைத்தும் பொதுப்பலன் பிற கிரகங்களின் அமைப்பு, சேர்க்கை, பார்வை, நடக்கக்கூடிய தசை, நடக்கக்கூடிய புத்தி இதனை வைத்துத்தான் முழுப்பலனையும் கணிக்க முடியும்.
நாகதோஷப் பொருத்தம் :
ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் நாகதோஷம் இருந்தால் திருமணப் பொருத்தம் செய்யலாம். ஆண் அல்லது பெண், இருவர் ஜாதகத்தில், ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோஷம் இல்லாவிட்டால், அந்த ஜாதகத்தைப் பொருத்தம் செய்யக்கூடாது.
ஆண், பெண் இருவருக்கும் சுபபார்வை இருந்து, அதனால் தோஷம் நீக்கப்படுமானால், பொருத்தலாம். ஒருவருக்கு தோஷம் நீங்கினால் மட்டும் போதாது. ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.
நடுத்தர பலனே கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும், மகிழ்ச்சியும், துயரமும் கலந்தே இருக்கும். அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை, ஜன்ம நட்சத்திர தசையாக வருவதால், இப்படிப்பட்ட ஜாதகத்தில் கேது பகவான் லக்கினத்திலோ அல்லது 2-வது வீட்டிலோ இருந்தால், பாதிப்பு ஏற்படாது.
திருவாதிரை, சுவாதி, சதயம், ஆகிய மூன்றும் ஜன்ம நட்சத்திரமாக வருபவர்களுக்கு, லக்னத்தில் அல்லது 2-வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்றும் ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம் !!!

நாகதோஷத்தை நீக்கும்
ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள். ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது.
ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், `என்ன வரம் வேண்டும்' என்று கேட்டது.
`நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
நாகதோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி நாளில், ஏதாவது ஒரு கோவிலில் நாகம் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது. அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்
புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம்
பலன்களையும் பார்ப்போம். ஒருவருக்கு ஜாதகம் கணித்து பலன்களைச் சொல்லும் பொழுது, ஜோதிடர்கள் பதவி பூர்வ புண்ணியனாம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நம்முடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அல்லது கர்ம வினைப்படியே, இந்த ஜென்மத்திற்கான பாக்கியம், யோகம் முதலியன கிட்டும். மனிதனாகப் பிறந்தவன், பிறப்பின் அர்த்தமான சந்ததியைப் பெருக்க வேண்டும். அதனால் தான், திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்த, `பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க'' என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
பதினாறு பேறுகள் என்பது, பதினாறு வகையான பாக்கியத்தைக் குறிக்கும். இந்த பேறுகள் வாழ்க்கையில், எல்லோருக்கும் கிட்டி விடுவதில்லை. சில கிடைக்கும், சில கிடைக்காது, பதினாறு பேறுகளில் தலையாய பேறாகச் சொல்லப்படுவது புத்திரப்பேறு.
மற்ற பேறுகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, புத்திரப்பேறு கண்டிப்பாக அவசியமானது என்று கருதப்படுகிறது. காரணம், அதுவே மனித வாழ்வின் அர்த்தமாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் அபிராமி பட்டர் கூட `தவறாத சந்தானம் வேண்டும்'' என்று அபிராமியிடம் வேண்டுகிறார்.
திருமணமான 10 மாதத்தில் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து விடுகிறது. சிலருக்கு 2,3 வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. இன்னும் சிலருக்கு 8,10, 12 ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. சிலருக்கு கர்ப்பம் தரித்தாலும் குழந்தை நிலைப்பதில்லை. இடையிலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது.
சிலருக்கு குழந்தைப் பேறே கிடைப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று அலசி, ஆராயும் போது, ஜோதிட சாஸ்திரம் கர்ம வினையைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த வினைப்படி தான் புத்திர பாக்கியம் கிட்டுகிறது. புத்திர பாக்கியம் கிட்டாதவர். புத்திரதோஷம் உடையவராகக் கருதப்படுகிறார்.
சென்ற பிறவியில் பெற்றோரைக் கொடுமைப்படுத்தியதால் பித்ரு சாபம் ஏற்படுகிறது. இதனால் இப்பிறவியில் பெற்றோரோடும், பிள்ளைகளோடும், அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல், தனித்து, தவித்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.
இல்லையென்றால் உறவுகளோடு வாழ்ந்தாலும், உதாசீனமும், அவமானமும் அனுதினமும் நடக்கும். உடன் பிறந்தவர்களுக்கு சேர வேண்டிய சொத்து, சுகங்களைத் தராமல், தானே அபகரித்த வாழ்ந்தாலும், அதனால் புத்திர தோஷம் ஏற்படும்.
பூர்வீக சொத்துப் பிரச்சனையில், அதற்கு உரிய உறவுகளுக்கு உரிய பங்கைத் தராமல் போனாலும், உறவுப்பகை, புத்திரர்களால் பகை, அவமரியாதை உருவாகும். இதன் விளைவாக, இப்பிறவியில் தான் பெற்ற பெண், கண்முன்னே வாழாவெட்டியாக வந்த நிற்பதையும், விவாகரத்து பெற்று வாழ்க்கையில் இருந்து விலகி நிற்பதையும் வேதனையுடன் பார்க்க வேண்டிவரும்.
முற்பிறவியில் ஆன்மீக அடியவர்களை, மகான்களை அவமானப்படுத்தியிருந்தால், புத்திர தோஷம் ஏற்பட்டு, பிறக்கும் குழந்தை வளர்ச்சியற்ற குழந்தையாக, ஊனமுற்ற குழந்தையாகப் பிறக்கும். கூன், குருடு, செவிடு போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷமும் உண்டு. இந்த தோஷத்திற்கு ஆட்பட்டவர்கள். வாழ்வில் எதிர்மறையான காரியங்களையே செய்வார்கள். வேண்டாதவர்களைப் பழி தீர்க்க பில்லி, சூனியம் வைப்பார்கள். மறந்தும் குலதெய்வத்தை வணங்கி விட மாட்டார்கள்.
இதன் பலனாக அமானுஷய நோய்கள் அதாவது புகழ் பெற்ற மருத்துவர்களுக்கும் புலப்படாத நோய்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலமாக தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். செய்தொழில் சிறக்காது. செர்ந்த பணம் நிலைக்காது.
அமைதி என்பது மருந்துக்கும் இருக்காது. எனவே புத்திரதோஷம் உள்ளவர்கள், சென்ற பிறவியிலோ, இந்தப் பிறவியிலோ அறிந்தும், அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி, திருந்தி உரிய பரிகாரம் செய்தால், கெடு பலன்களின் கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இனி ஜோதிட ரீதியாக புத்திர தோஷத்தை ஆராயலாம். ஜெனன கால ஜாதகத்தின்படி பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது 5-ஆம் இடமாகும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது.
5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை, சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். 5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோ`ம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு. 12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 10-க்கு உடையவன். 8-இல் இருந்தாலும் சந்தான தோஷம் உருவாகும். லக்னாதிபதி புதனாக இருந்து சந்திரன் 10-இல் இருந்து, சுக்கிரன் 7-லிலும், 4-ஆம் இடத்தில் ஏதாவது ஒரு பாவக்கிரகம் இருந்தால், வம்சம் விருத்தியாகாது.
பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்
பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம்.
பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், அதற்கான பரிகார பலன்களையும் பார்ப்போம். ஐந்து மகாபாதகங்களைச் செய்பவர்கள் கொடூர நரகத்தில் சிக்கி அல்லல்படுவர். அவர்களோ இப்பூமியில் திரும்ப திரும்ப பிறப்பெடுப்பர் என்று சொல்லப்படுகிறது.
ஐந்து மகாபாதகங்களில், மிகப்பெரிய பாதகமாகச் சொல்லப்படுவது ஒரு தர்ம ஆத்மாவைக் (உயர்நிலை ஆத்மா) கொல்வது. சாதாரணமாக பிரம்மஹத்தி என்ற சொல்லிற்கு பிரம்ம என்றால் பிரம்மன், பிராமணன் என்றும் ஹத்தி என்றால் கொல்லுதல் என்றும் பொருள். பிரம்மனை நோக்கி, தேடிச் செல்பவனை பிராமணன் என்றும் சொல்கிறார்கள்.
பிராமணன் என்றழைக்கப்படுபவன் - பிறப்பினால் அல்ல, தன்னுடைய ஆன்மீக அர்ப்பணிப்பால் உயர்ந்தவன் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீக ஒளிபொருந்திய தெய்வீக உடலைச் சிதைத்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிராமணனை (ஆன்மீகவாதியை, தர்ம ஆத்மாவை) கொல்வது பிரம்மஹத்தி தோஷம் என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
பிராமணனைக் கொன்றால் மட்டுமல்ல, குருவைக் கொன்றவன், குரு பத்தினியை அடைந்தவன். பெற்ற தாயைக் கொன்றவன், பெண்களைக் கொடூரமாகச் சிதைப்பவன், தங்கம் திருடியவன் ஆகியோருக்கெல்லாம் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இந்த தோஷம் ஏற்பட்டால், வாழ்க்கை என்பது நரகமாக, சித்ரவதைக் கூடமாகவே அமையும், துன்பம் என்றால் அப்படியொரு துன்பத்தை அனுபவிப்பார்கள். அதுவும் தனது கடைசிகால வாழ்க்கையில் அவர்கள் படும் அவலத்தைக் காண சகிக்க முடியாது.
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும். லக்னத்திற்கு 4-ஆம் இடத்தில் பாவிகள் இருந்து, 6,8. 12- இல் சுபக்கிரகங்கள் இருந்தாலும். பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதாவது ஜாதகர் முன்ஜென்மத்தில் மிகப்பெரிய பாதகத்தைச் செய்திருப்பார் என்று சாஸ்திரம் சொல்கிறது.
ஒருவரின் ஜனன கால ஜாதகப்படி, லக்னத்திற்கு 5,8,9-ஆம் வீடுகளுக்கு அதிபதி பாவியாக இருந்தாலோ அல்லது பாவியர்களுடன் இருந்தாலோ பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தோஷத்தின் வெளிப்பாடாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு கொடிய நோய் வரலாம்.
சந்ததி இருக்காது. மணவாழ்க்கை இனிக்காது. ராகு தங்கிய வீட்டிலிருந்து 5,9-ஆம் இடங்களில் சனியும், வியாழனும் சேர்ந்து இருந்தாலும் சண்டாளன் ஆவான். சனியும், வியாழனும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. சனி, வியாழன் சேர்க்கையும் ஒரு பாதத்தில் அல்லது 10 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.
பிரம்மஹத்தி தோஷ சம்பவங்கள்
சிவன்:- பிரம்ம தேவனின், ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி எறிந்தார். கொய்த தலையை, கையில் எடுத்துக் கொண்டு அலைந்தார். இறுதியில் கண்டிïர் திவ்விய தேசத்தை வந்தடைந்தார். ஸ்ரீமன் நாராயணனை வணங்கி, புஷ்கரணையில் மூழ்கி எழுந்தார்.
கையில் ஓட்டியிருந்த கபாலம் நீங்கியது. சிவபெருமானப் பீடித்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த இடம் சாப விமோசன பூமியாகக் கருதப்படுகிறது. அங்குள்ள புஷ்கரணியும், கபால தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.
இந்திரன் : ஒரு முறை, இந்திரன் விருத்ரசூரனை அழித்து விட்டான். இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. விருத்ரன், ஒரு பிராமணன் என்பதினால் தான். இந்திரனையும் பிரம்மஹத்தி தோஷம் சுற்றி வளைத்தது. தோஷத்தைப் போக்க இந்திரன் திருப்புளியங்குடி திவ்ய தேச தீர்த்தத்தில் நீராடினான். பூமிபாலரையும் வழிபட்டான். பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
ராமாயணம் : -ராமாயண காவியத்தில், தசரதருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் எப்படி ஏற்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது. தசரதர், தனது இளம் வயதில் காட்டில் வேட்டையாடும்போது, கண் தெரியாத பெற்றோரைக் காப்பாற்றி வந்த ஓர் அந்தணனை அவன், தனது குடத்தில் தண்ணீர் எடுக்கும் ஓசையை வைத்து, யானை என நினைத்து, அம்பெய்திக் கொன்றுவிட்டார்.
அவருக்கு இடையில் ஏற்பட்ட இன்னல்களை வைத்து, அந்தணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. ராமரும், வேதம் அறிந்த, கலைகள் கற்ற இராவணனைக் கொன்றதற்காக, சேதுசமுத்திரக்கரையில், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க `மணல் லிங்கம்'' வைத்து பரிகாரம் செய்ததாக இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள்
பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம்.
திருப்புல்லாணி அருகே தேவிபட்டணத்தில் நவபாஷாணம் என்றழைக்கப்படும் சமூத்திரக் கரையில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகத்தை வழிபட்டு, பாவ நீக்கம் செய்து கொள்ளலாம். கலியுகத்தில், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட ராமேஸ்வரம், மிக முக்கிய தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்ய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு வீட்டிலிருந்து, நடைபயணம் செய்தால் மிக நல்லது.
பரிகார நடைமுறைகள் : - பரிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி, சேர்ந்து செய்ய வேண்டும். குழந்தைகளையும் சேர்த்துத்தான் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் போது திருநீறு, திருமண், சந்தனம் அணிய வேண்டும். முழு நம்பிக்கையோடு ஈடுபாட்டோடு, ஒற்றுமையோடு பரிகாரம் செய்ய வேண்டும்.
வேதம் கற்றறிந்தவர்களுக்கு, ஆன்மீக அன்பர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சூரியன், உச்சிப் பொழுதிற்கு வருவதற்கு முன்பாகவே, பரிகாரங்களைச் செய்ய வேண்டும். மாலை, இரவு நேரங்களில் தெய்வ வழிபாடு செய்யலாமே தவிர, பரிகாரங்களைச் செய்யக் கூடாது.
விதிவிலக்காக அந்திக்குப் பிறகு செய்யக் கூடிய சில வழிபாடுகள், படையல்கள், பரிகாரங்களைப் பற்றியும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பரிகார பூஜையின் போது குடம், சொம்பில் தீர்த்தம் வைப்பர், பூஜை முடிந்த பின் அந்தத் தீர்த்தத்தைக் குடிப்பர்.
மீதமுள்ள தீர்த்தத்தை வீட்டில் உள்ள கிணற்றில் கொட்டலாம். வீட்டில் கிணறு இல்லாவிட்டால், அடுத்தநாள் காலையில் பாதுகாப்பாக வைத்திருந்து, தலையில் ஊற்றிக் குளிக்கலாம், எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டின் குளியல் அறையிலோ, சாக்கடையிலோ கொட்டி விடக் கூடாது. சுக்கில பட்சம் மற்றும் வளர்பிறை நாட்களில் செய்யும் பரிகாரம் சிறப்பானது.
கிரகத்தின் ஜனன மாதம், கிரகத்தின் கிழமை, கிரகத்தின் நட்சத்திரம் ஆகியன ஒன்று சேர்ந்த நாளாக இருந்தால், அது மிக மிக பரிகாரம் செய்ய உகந்த நாளாகும். புதனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புதன், சிம்மத்தில் இருந்தால், சூரியனுக்குரிய ஞாயிறு அன்று செய்வது நல்லது.
ஜென்ம நட்சத்திரம் வரும் காலத்தில், சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜென்ம நட்சத்திரமே சிறப்பானது. சுபமான காரியங்களுக்கு வளர்பிறையும் அதிகத் துன்பம் கொடுக்கும் விஷயங்களுக்கு கிருஷ்ணபட்சத்திலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்வதற்கு உகந்த இடங்களாக - குளக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை, சிவன், விஷ்ணு ஆலயங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
இருக்கும் வீட்டில் செய்யக் கூடியவைகள்- கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் லட்சுமி நாராயணபூஜை ஆகியனவாகும். பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், உரிய பரிகார பூஜை செய்து, தோஷம் நீங்கி, அனைத்து வளங்களும் பெற தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருள் புரிவாள்.

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல

பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும். ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும் மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.ஓம்நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும். ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.சிங் சிங் சிவாய ஓ எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷிசிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்.

சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும்.
ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும்
கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.
அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.
ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும். ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி. சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.

தேவ வசியம்


 

 

 

 












தேவர்களை வசியம் பண்ணும் முறை

வசியக்கலையில் ஜன வசியம், ராஜ வசியம், ஸ்திரி வசியம், புருஷ வசியம், தேவ‌ வசியம், சத்ரு வசியம், மிருக‌ வசியம், லோக வசியம் என எட்டு வகை உண்டு. அவற்றில் தேவர்களை வசியம் பண்ணும் முறைகளில் ஒன்றினை பார்க்கலாம்.

மந்திரம் :‍‍- ஓம் அம் அம் றீம் உம் யிம் வசி சுவாஹா.
 
கிரியை : வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் வெற்றிலையில் விபூதி பரப்பி உரு நாளொன்றுக்கு 1008 வீதமாக 48 நாட்கள் செய்ய வேண்டும். பால், பழம், சக்கரைப்பொங்கல்,புஷ்பங்கள், கற்பூரம், ஊதுபத்தி ஆகியன வைக்கவும்.
பூசை செய்து விபூதியை அணிந்து கொண்டால் சகல தேவர்களும் வசியமாவார்கள். 

சுளுக்கு நீங்க மந்திரம்

எமது உடலிலோ மற்றவர்களது உடலிலோ ஏதேனும் பாகம் சுளுக்கிகொண்டால் அதை நீக்குவதற்கு இம்மந்திரம் உபயோகப்படும். கிரகண காலங்களில் இம்மந்திரத்தை சித்தி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மந்திரம் :
          ஓம் தேர் உருள தேர் வடமுருள சங்குருள சக்கரமுருள தானே வடமுருள அங்குருள ஆகாசமுருள சுளுக்கு உருண்டு திரண்டு உருள ஓடிவா ஓம் மசி வய சுவாகா.

கிரியை :      
          முதலில் 1008 உரு சொல்லி சித்திசெய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரயோகத்தின்போது இரும்புகம்பி ஒன்றினால் சுளுக்குள்ள இடத்தில் வைத்து மந்திரத்தை 21 முறைகள் கூறிக்கொண்டே இழுத்து இறக்கவும்.

வறுமை நீங்க சொர்ண வைரவர் மந்திரம்

சிவனின் வைரவர் கலைகளான அசிதாங்கர், ருருவர், சண்டையர், குரோதர், கபாலர், உன்மத்தர், பீசணர், சங்காரர் ஆகிய எட்டு கலைகளும் சித்தர்களால் ஒருமுகப்படுத்தப்பட்டு வணங்கப்பட்டவரே சொர்ண வைரவர்.
இவர் இருளை நீக்கி ஒளியைதருபவர். சொர்ண வைரவரை வணங்கி பூஜித்தால் வாழ்வின் இருளாகிய துன்பம், வறுமை முதலியன நீங்கி ஒளியான மகிழ்ச்சி, செல்வம் முதலியன பெருகும் என்பது ஐதீகம்.

சொர்ணவைரவர் மந்திரம் :-
 ஹரி ஓம் றீங் நவகோடி சொர்ணவைரவா வாவா ஐயும் கிலியும் சௌவும் சதா காலமும் என் முன் நிற்க சுவாஹா.

கிரியை :-
வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர், வடை என்பன வைத்து  காலை 1008 உரு மாலை 1008 உரு வீதம் 48 நாட்கள் பூஜிக்கவும். இதனால் வறுமை நீங்கும், உலகில் செல்வாக்கு மேன்மைபடும்.

முக வசியம்

எமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.

மந்திரம்:-
ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.

கிரியை:- பூரணை தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும்.
பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.

பேய், பசாசுக்கு குளை அடிக்க

அரி ஓம் நமோ பச்சை நிறமும் பவளவாயும் அறையில் கட்டிய சந்திரகாவிப்பட்டும் ஒட்டியாணமும் மார்பிலிட்ட நூல்மாலையும் களுத்திலிட்ட ஆபரணமும் காதிலிட்ட கவசகுண்டலமும் கிரீடமும் திகளேந்திய இளமாது முல்லையும் நவரத்தினமாகிய பல்லும் மூக்குத்தியும் சிலம்பும் சிங்கக்கொடியும் மானொருகை மளுவொருகை சங்கொரு கை சக்கரம் ஒருகை அன்பர்க்குச் சொர்ணமளித்திடு கரமும் மஞ்சாதென்னும் மத்தியகரமும் துலங்கிய விபூதியுமாய் எழுந்தருளியிருப்பாள் என்னம்மை மோகம்புரி மாங்கிஷமாது நீயே சுவாகா ஓம் அங்ஙறிங்ங மத்தே சத்தே மரிசெய் மாசத்திரி நீலி நீலி நீலகண்டி மோகாம்புரி தூளி தூளி தூளி உச்சாடு உச்சாடு பூதப்படையும் போகாவியாதியும் பிச்சீ பித்தத்தீயும் பிடி சன்னியும் சனித்தசன்னியும் சன்னிவகை பதினெட்டும் விட்ட பசாசும் வைத்த சூனியமும் ஆலகால மரத்தில் ஆணி அறைந்ததும் மண் துறையில் புதைத்த பலபல சூனியமுள்ளதும் வயிற்றுக் கழிச்சலும் மலஞ்சலம் மறிபட்டதும் எட்டுக் குரளியும் கூடிய நஞ்சும் வேதாளபூதமும் மூன்றுகப் பிளவை முன்கண்ட மாலைகாலடியரிப்பு அரையினில் புத்துடன் பத்தெளுர் துடையினில் படுவன் தொண்ணூற்றாறும் ஐநூற்றைம்பது அழந்திடு வியாதி தொண்ணூற்றாறு தோன்றிய வியாதியும் நாநூற்றைம்பது நானாவலியும் கன்னக்கிரந்தியும் களலை கண்டமாலைகளுமின்றி எழுந்திடு மீளா வியாதியும் இருமல் ரோகம் எண்பத்துமூன்றும் தலைவலி சூலை தண்டுப்பிளவையும் அண்டவாதம் அடங்காக் கழிச்சல் பொத்திக்கரப்பான் புத்துடன் கண்வலி காயாம்பூக் காய்ச்சல் கண்ணில் சிகப்பூ விழிகண் குறுடூவிழி மினுமினுங்கல் குவளைச் சிலந்திகுத்து விப்புருதீ மோகாம்புரி நாகப்படலம் நத்தைப்படுவன்  புருவவாதம் புகைஎழு புண்ணும் சுருக்குடன் இளைப்பு முடக்கியவாதம் முப்பத்துமூன்று எழுந்திடு வியாதி எழுபத்திரென்று தோன்றியவியாதி தொண்ணூற்றாறு பிறமுனை கட்டு கட்டு கரிமுகனே வெட்டு வெட்டு வேலாயுத்தின் ஆணை சுட்டெரி சுட்டெரி ஏ நெடா கெடுவா நா நெடா மோகாம்புரி தீண்டாதவரைத் தீண்டுவதேதடா சிவனடியாரை அணுகுவதேதடா திருநம்பிமாயா ஐய்யன் கோவில் அதிரப்பிடுங்கி மற்றுள்ள கோவில் மண்டு தீயிட்டு சாமுண்டி கோவில் தனலாயெரித்து உள்ளுறங்கள் பேசிவந்தேந் வாளாலறுத்திடு விழியாலெரித்திடு சிந்தீயிற் தீயால் சினக்கும் மோகாம்புரி அம்மை கரத்தாலறுத்த மோகாம்புரியம்மை எரிதணல் மளுவால் எரிக்கும் மோகாம்புரி எரி எரி திரிபுரமெரிய அகோர உருத்திராய நம ஓடம்மா ஓடு.
பேய், பசாசு பிடித்தவர்களுக்கும் சன்னி, தோஷங்களுக்கும் இம்மந்திரம் சொல்லி வேப்பிலை அடிக்க நீங்கும்.

திருஷ்டி போக்கும் மந்திரம்

திருஷ்டி போக்கும் மந்திரம்.

மனிதர்களுக்கோ அல்லது வீடு, வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றுக்கோ திருஷ்டி கழிப்பதற்கு சிவனுக்கு ஒப்பாக கருதப்படும் முக்கண்ணனாகிய தேங்காய் முன்னிலை வகிக்கின்றது.
                          இந்த தேங்காய்மூலம் திருஷ்டியை போக்குவதற்கும் ஒரு மந்திர முறை உண்டு. இம்முறை மூலம் திருஷ்டி கழிப்பதால் சகலவிதமான திருஷ்டிகளும் அகல்வதோடு செய்யும் காரியங்களிலும் சித்தி உண்டாகும்.

மந்திரம் :- ஓம் முக்கண்ணனே உகந்தநாதா சோலைபுரி ஸ்தூலபூபா சடைநிறைந்த மட்டைமன்னா திருஷ்டிக்கு முதன்மையான மைந்தனே சிரசுடையமுகம் கொண்டோனே வாவாவா ஓம் ரீம் சுவாகா.

முறை :- இம்மந்திரத்தை 1008 முறை உருச்செய்ய மந்திரம் சித்தியாகும். பின்னர் பிரயோகத்தின் போது திருஷ்டி கழிக்கவேண்டியவரை வடகிழக்கு திசை நோக்கியவாறு நிறுத்தி மந்திரத்தை 21 தடவைகள் உச்சரித்தவாறு திருஷ்டி கழிக்கவும். வீடு, வியாபார ஸ்தலம் போன்றவற்றுக்கு திசை அவசியமில்லை. 21 முறை கூறி திருஷ்டி கழித்த பின் தேங்காயை உடைக்கவும்.

மந்திர சித்திக்கு பிரணவம்

நாம் மாந்திரீக வேலைகளில் ஈடுபடும்போது அம்மந்திரமானது
சித்தியாவதற்கு இப்பிரணவ மந்திரத்தை பிரயோகித்தல் வேண்டும்.


பிரணவ மந்திரம் :-  

ஒம் மந்திர பிரணயா மந்திர சிவமே சிவம் ஓம் எந்திர பிரணயா எந்திர சிவமே
சிவம் அடியேன் செய்யும் மருந்து மந்திரம் சித்திக்கப் பலிக்க அருள் புரியவே சுவாகா.

கிரியை :-
 
முதலில் 108 முறை உருச்செய்து சித்தி செய்துகொள்ளவும். பின்னர் எந்தவொரு மந்திர காரியங்களும் செய்யும் முன் இதனை 3 முறை கூறிவிட்டு தொடங்கவும்.


விநாயகர் வாலாயம் (வசியம்)

விநாயகர் வாலாயம் (வசியம்)

மந்திரம் : ஓம் கெங் கெங் கணபதி கௌரி புத்திராயா வங் வங் வருக வருகவே சுவாகா.

அட்சரம் : முக்கோணம் கீறி நடுவில் ஓங்காரம் போடவும்.

கிரியை : வெள்ளை துணி விரித்து அதன்மேல் பச்சரிசி பரவி அட்சரம் கீறி அட்சரத்தின் மேல் கும்பம் வைக்கவும். உரு 108 வீதமாக காலை மாலை இருவேளையுமாக ஒரு மண்டலம்(48 நாட்கள்) செபிக்க சித்தியாகும். தூபதீபம் காட்டி  நறுமலர்கள், அவல், கடலை போன்ற நைவேத்தியங்கள் வைக்கவும்.

பலன் : விநாயகர் வசியமாகி நாம் செய்யும் அனைத்து காரியங்களும் தடைகள் நீங்கி சித்தியாக அருள்பாலிப்பார்.

சரஸ்வதி வசியம்

கலைவாணியின் அருள் இருந்தால் ஆயகலைகள் அனைத்தும் கைகூடுவது திண்ணம். நாம் கற்பவை அனைத்தும் நம் நினைவில் நிற்க அருள் புரியும் சரஸ்வதி தேவியின் வசிய முறை ஒன்றினை பார்ப்போம்.

மூலமந்திரம் : ஓம் ஹீம் வாணிதேவி வா வா சுவாகா.

கிரியை : வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் மஞ்சள் தெளித்து அறை முழுவதும் தூபம் போட்டு பின்னர் தீபம் ஏற்றி நைவேத்யம் வைத்து மூலமந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.

பலன் : இதனால் கல்வி விருத்தியாகும். சங்கீதம் பயில்பவர்களுக்கும் மிகவும் உகந்தது.

ஒற்றை தலைவலிக்கு மந்திரிக்க.

மந்திரம் :
ஓம் முப்பத்து முக்கோடி தேவரின் ஐந்தெழுத்தையும் நான் செப்பத்தகுமோ சிவ சிவ நசி மசி.

கிரியை :
உரு 1008 முறை செபிக்க மந்திரம் சித்தியாகும். பின்னர் பிரயோகத்தின் போது நோயாளியின் தலையைப் பிடித்து மேற்படி மந்திரத்தை 108 முறை செபிக்க கடுமையான தலைவலி நிவர்த்தியாகும். இதுபோலவே இம்மந்திரத்தின் மூலம் காய்ச்சல், வயிற்றுவலி, மாந்தம் போன்ற வியாதிகளையும் குணப்படுத்த முடியும்.

மாரியம்மன் வசியம் (வாலாயம்)


மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு
மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை ஆவார்.
இதனால் மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இத்தகைய சக்தியை வசியம் செய்யும் போது நோய்நொடிகள் அண்டாது.
மற்றும் சகல நன்மைகளும் சகல பாக்கியமும் கிட்டும்.


மந்திரம் :‍‍‍‍‍ அரி ஓம் பகவதி திரிலோக பகவதி வசீகரி ஆனந்த கல்யாணி ஓம் தேவி வீரலெட்சுமி என் வாக்கிலும் என் மனதிலும் நிற்க நிற்கவே சுவாகா.

கிரியை : தினமும் சுத்தமாக ஸ்நானம் செய்து விளக்கேற்றி அம்மனுக்கு படையல் வைத்து வேப்பம் பத்திரம் சாத்தி நறுமலர்கள் வைத்து காலை
மாலை 108 உரு வீதம் 21 நாட்கள் செபிக்க அம்மன் வசியமாவாள்.




இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.


தல வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். (கிராமப்பகுதிகளில் பக்தியுடன் இருப்பவர்களிடம் சாமியே அவர்களுக்குள் இறங்கி அவர்கள் மூலம் ஆடும் நிலைக்கு சாமியாடுதல் என்று பெயர். இந்த நிலையில் அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு அருள் வாக்குகள் என்று பெயர்). சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து கோயில் அமைத்து வணங்கினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். இந்த கோயிலின் தல வரலாறு இதுதான்.
தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரான இந்தப் பூசாரிப் பெண்ணின் குடும்பத்தினர் வழியில் வந்தவர்கள் இந்தக் கோயிலின் பரம்பரைப் பூசாரிகளாகவும், கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து கோவிலை நிர்வகித்து வந்தனர். தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை இக்கோயில் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பின்பு கோயிலில் பூஜை செய்யும் உரிமை மட்டும் அந்தக் குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதுடன் அறங்காவலர் பொறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கோயில் அமைந்துள்ள இடம்

வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப் பட்டுள்ளது.
கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்கின்றனர்.

இருக்கன்குடி பெயர்க் காரணம்

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது. இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இங்கு நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் கங்கையை வேண்டி தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும் இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுணன் என்பதால் இதற்கு அர்ச்சுணன் ஆறு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

வழிபாட்டு முறைகள்

  • இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்குப் புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
  • அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்து வலம் வருதல் போன்றவை மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.
  • இங்கு குழந்தையில்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.
  • உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர்.
  • இது தவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது. (பொதுவாக எந்த மாரியம்மன் கோயில்களிலும் ஆடு, கோழி போன்றவற்றை உயிர்ப் பலியிடும் வழக்கம் கடைப் பிடிக்கப்படுவதில்லை. இந்தக் கோயில்களில் இருக்கும் கருப்பசாமி பொன்ற காவல் தெய்வங்களுக்குத்தான் உயிர்ப்பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இது மாரியம்மனுக்குச் செய்யும் வேண்டுதலாகிக் கொண்டிருக்கிறது.)

சிறப்பு விழாக்கள்

ஆடி, தை, பங்குனி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தென் மாவட்டங்களின் பல ஊர்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதால் இந்த நாட்களில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

துணைக் கடவுள்கள்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வாழவந்தம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், முப்பிடாரியம்மன் போன்றவைகளுக்கும் காவல்தெய்வமான கருப்பசாமிக்கும் துணைக் கோயில்கள் உள்ளன.

பயண வசதி

மதுரை யிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகர் இருக்கிறது. இங்கிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து இருக்கன்குடிக்கு நகரப்பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
இரயில் பயணத்தில் மதுரை யிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் சாத்தூர், விருதுநகர் போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக இருக்கன்குடிக்குச் செல்லலாம்.

பண்ணாரி மாரியம்மன் தல வரலாறு

பண்ணாரி மாரியம்மன்  தல வரலாறு                        
               அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு  பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக  விளங்குகிறாள். காட்டுக்குள்ளேயே இவளுக்கு விழா நடக்கிறது.  நவராத்திரியையொட்டி இவளை தரிசித்து வருவோம்.

தல வரலாறு
                    பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங் கரையில் மக்கள் மாடு மேய்த்து வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது. மடுநிறைய பாலுடன் செல்லும் பசு, திரும்பும் போது காலியான மடுவுடன் வரும். மாடு மேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தார். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில்உள்ள புற்றில், பாலைப் பொழிவதைப் பார்த்தார். மறுநாள் கிராம மக்களிடம்  விபரத்தைக் கூறினார். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை பார்த்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, ""நான் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து வருகிறேன் (இவ்வூர் கேரளாவில் உள்ளது). பொதிமாடுகளை ஒட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் தான் தங்க விரும்புகிறேன். என்னை "பண்ணாரி மாரியம்மன்' எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள்,'' என்றார்.
 அந்த அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத் துடன் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.
தல சிறப்பு
                  இந்த அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர். இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது.  திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மாறாக, மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது.
                         கோயில் அமைப்பு: தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
குண்டம் திருவிழா
            இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு "கரும்பு வெட்டுதல்' என்று பெயர். தற்போது பங்குனி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா நடக்கிறது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு.
கண்வியாதிக்கு தீர்த்தம்
                           காட்டு இலாகா  அதிகாரியாக பணியாற்றிய மற்றொரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் குறிவைத்துச் சுட்டார். இதன்பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி  உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக  நம்பப்படுகிறது.திருவிழா காலத்தில் தென்படாத மிருகங்கள்: பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலம் காட்டில் உள்ளது. இங்கு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள், செந்நாய்கள், கரடிகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. கோயில் தெப்பக்கிணறு அருகில் காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க தொட்டிகளும் கட்டப் பட்டுள்ளன. திருவிழா காலங்களில் இந்த மிருகங்கள் பக்தர்கள் கண்களில் தென்படுவதில்லை.
பூச்சாற்று சிறப்பு
                              பங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. மறுநாள் அம்மன் சப்பரத்தில்  சுற்றுவட்டாரப்பகுதிக்கு வீதி உலா வருகிறாள். சோளகர் என்ற மலைவாசிகள் வாத்தியங்ளும், அருந்ததி இனத்தார் தாரை, தப்பட்டை வாத்தியங்களும் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பூச்சாற்று விழாவின் ஒன்பதாம் நாள் இரவில் அக்கினி கம்பம் அமைக்கப்பட்டு கம்பத்தருகில் மேளதாளத்துடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 15ம் நாள் திருவிழாவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.
திருவிழா: 
                    ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.
திறக்கும் நேரம்:
                            காலை 5.30 முதல் இரவு 9 மணி.
இருப்பிடம்:
                 கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்.

சமயபுரம் மாரியம்மன்


சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்பு வாயில்தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையாயது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, தமிழ் நாட்டின் முக்கிய நகரமும், முற்கால சோழ வளநாட்டின் தலைநகரமும் ஆன, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
சமயபுரத்து மாரியம்மன், இங்கு, மக்களின் குறைகளை போக்கி வேண்டியவருக்கு வேண்டிய வரமளிக்கும், மகாசக்தியாக, ஆயி மகமாயி, அன்னை பராசக்தியாக கோயில் கொண்டிருக்கிறாள்.

சமயபுரம் வரலாறு
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்புத் தோற்றம்தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.
சமயபுரம் மாரியம்மனின் வரலாறு


        சமயபுரம் மாரியம்மன் (சித்திரம்)
மேலே குறிப்பிட்ட கால கட்டத்தில் வைணவி என்ற மாரியம்மன் விக்கிரகம் ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஐயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள இனாம் சமயபுரம்).
பிறகு அம்பாளின் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்).
அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அம்பாளின் விக்கிரகத்தை பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அம்பாளை வழிபட்டு அம்பாளுக்கு 'கண்ணனூர் மாரியம்மன்' என்று பெயரிட்டு வழிபட்டனர்.
விஜயநகர மன்னர்கள்
இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள்.
விஜயரெங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, 'சமயபுரம் மாரியம்மன்' கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

அம்மனின் அழகும் அருளும்
மக்களை இரட்சித்து, வேண்டிய வரங்களைக் கொடுத்து, காத்துவரும் அம்மனின் அழகு தெய்வீகமானது. அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். அந்த அழகைக் கண்டால் மனம் உருகும், மனம் ஒருமைப்படும், மனத்திலுள்ள மாசும் அகலும்.
தாயைத்தேடி அலைந்தவர்க்கு, கருணையே வடிவாக அமர்ந்திருக்கும் தாய், ஆயி மகாமாயி காட்சி தருவாள்.
கோவிலின் நிர்வாகம்
திருவிழாக்கள்
ஆடி வெள்ளி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெருகிறது. இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆடி மாதத்தில் எல்ல வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர். அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர்.

பூச்சொரிதல் விழா



கோயிலின் வாயிலில் மக்கள் கூட்டம்
அன்னையை காண தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.
விழாக்காலங்களில் சொல்ல முடியாத அளவு கூட்டம் வரும். சித்திரைத் தேர்த்திருவிழாவன்று கூட்டம் அலைமோதும். இலட்ச கணக்கில் மக்கள் வருவர். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமே.
ஆயிரம் கண்ணுடையாளை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து அவளை மனம் குளிர தரிசித்து அவளின் ஆசீர்வாதத்துடன் செல்கின்றனர்.
மாரியம்மனுக்கு நாடெங்கும் பக்தர்கள் உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
கோவிலுக்குச் செல்ல வழிகாட்டல்
சமயபுரத்தின் மற்ற பெயர்கள்
சமயபரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு கீழ் காணும் பெயர்களும் உண்டு.
  • கண்ணனூர்
  • கண்ணபுரம்
  • விக்ரமபுரம்
  • மாகாளிபுரம்
சமயபுரத்தில் உள்ள மற்ற கோவில்கள்
  • வடக்கே --- செல்லாயி அம்மன் கோவில், போஜீஸ்வரன் கோவில்
  • கிழக்கே --- உஜ்ஜயினி மாகாளி கோவில், முத்தீஸ்வரன் கோவில்
மற்ற விவரங்கள்
தீர்த்தம் --- பெருவளை வாய்க்கால்
தீர்த்தம் --- மேற்கே உள்ள மாரி தீர்த்தம் ( தெப்பக்குளம் )
ஸ்தல விருட்சம் --- வேப்ப மரம்

 

Tuesday, May 24, 2016

அனுமார் மூல மந்திரம்..



ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய நமஸ்து



இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர நலமும், வளமும் நிறையும்.

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள்

1.மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.



2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் !
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :
மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்
சக்தி : கீலகம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
ஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.

மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள் :

சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.

குறிப்பு :

முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.


3. அஷ்டலட்சுமி மஹா மந்திரம்

முதலில் மஹாலட்சுமியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம் செய்யவும்.

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே விநியோக:

தியானம்

அருண கமல ஸமீஸ்தா - முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.

ஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
மஹாலக்ஷ்ம்யை நம:

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை
கமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்
ப்ரஸுத்யை ஸ்வாஹா

இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.

4. சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:
ஜகத் ப்ரஸுத்யை ஸெளபாக்ய
லக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி
ஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா
என்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

5. அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

6. கமலவாசினி மந்த்ரம்

நம : கமல வாசின்யை ஸ்வாஹா

இது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் - 10 லக்ஷம் ஜபம் - த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.

அல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.

7. பொன் - மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்

லக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.

ஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

என்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.

8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்
மேதேஹி ஸ்வாஹா

அசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம், கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.

9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட

சித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.

மந்த்ரம் :

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவீர் ஜுஷதாம்

வெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப் பதவி கிட்டும்

கையில் காப்புக்கயிறு கட்டுவதன் பலன்

கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டிய தன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். மஞ்சள், சிவப்பு, கருப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக செயல்படும். பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும். நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும். மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது. நாயுருவி, சீதெவிசெங்கழுநீர் , அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பே.

சகல விஷகடிகளுக்கு மந்திரம்

ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு
மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.

சித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்
சகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்
பூச்சிகடி,வண்டுகடி,பூராங்கடி,பாம்புகடி,நாய்கடி,பூனைகடி,எலிகடி
முதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்
மந்திரித்து கொடுக்கவும்.

மந்திரம், மாயவித்தை

மாந்திரீக சக்தி மூலம் நாம்
1.வசியம்
2. மோகனம்
3. ஆகர்சணம்
4. தம்பனம்
5. பேதனம்
6. வித்வேசணம்
7. உச்சாடனம்
8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.


மந்திரங்கள்




வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.


மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.


தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.


உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.


ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.


பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.


வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.


மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்..

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்..
ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,
க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.
முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்
குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள
கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்
தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.
“காலனைப் போல கருநிறம் உடையவனும், இரண்டு தோள்களையுடையவனும், இரு
கைகளில் சுத்தியையும் கதையினையும் ஏந்தியவனும், அழகிய கோரைப்
பற்களையுடையவனும், பயங்கரமானவனும், பயங்கரமான தோற்றத்தையுடையவனும்,
வணங்கியவர்களுடைய பயத்தைத் தீர்ப்பவனும், பாதுகையின் மீதேறி நடமிடுபவனும்,
இளமையானவனும், இளஞ்சூரியனது ஒளியையுடையவனும், சிரித்த முகத்தையுடையவனும்,
ஆயுதத்தினால் மதங்கொண்டவனும், வளைந்த பாதத்தையுடையவனும், சிதறிய கேச
பந்தத்தையுடையவனும், தாமரை போன்ற கண்ணையுடையவனும், கருநிறமுடையவனும், ஆக
Shiva புத்திரனை வணங்குகிறேன்

உச்சிமாகாளி கதை

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினர். அப்போது விஷ்ணு சொன்னார். ' 'பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது ' '

இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பலவகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு, வச்சிராயுதம், கற்பக விருட்சம் என்று பல தூய பொருட்கள் . கடைசியில் ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் எரிக்கும் தன்மை கொண்டது.ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது நிலத்தில் விழக்கூடாதுஎ ந்று தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கிவிட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருள்படுத்தவில்லை. பார்வதியோ கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து உச்சினிமாகாளி பிறந்தாள்.

சிவன் தலையில் பிறந்த காளியை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளைத் தன் மகளாகப் பாவித்தாள். அவளுக்கு வாந்திபேதி, பெரியம்மை, சின்னம்மை, வலிப்பு ஆகிய வியாதிகளை உண்டாக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். ' 'உன்னை வணங்குபவர்களுக்கு இந்தமாதிரி வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் ' ' என வரங் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம், கறுப்பன், மோகினி ஆகிய பிசாசுக்கூட்டங்களையும் படைத்தாள்.

உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் வாங்கினாள். பின் கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள். இப்படி இருக்கும்போது ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடினர். விக்கிரமாதித்தியன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். மந்திரி பட்டியிடம் ' 'தம்பி தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா ' ' என்றான். பட்டி காட்டுக்குள் சென்றான் பல இடங்களில் அலைந்தான். கடைசியில் ஒரு சுனையைக் கண்டான்.

பட்டி சுனையில் தண்ணீர் கோரியபோது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான். ஆனால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. பட்டி சுனையிலிருந்து தண்ணீரைக் கோரினான். விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தியன் மயஙகினான். உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது அவனுக்கே தெரிந்தது. உலகத்தையே மறந்து உறஙகினான் அவன். அப்போது ஒரு கனவு கண்டான். கனவில் உச்சினிமாகாளி வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதை உணர்த்தினாள். ' 'எனக்கு இங்கு ஒரு கோவில் கட்டுவாய் ' ' என்றாள்.

விக்ரமாதித்ய மன்னன் விழித்தான். கனவு கலைந்தது. தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பாட்டியிடம் கூறினான். பட்டி ' 'அரசே அந்தச் சுனையில்தான் தெய்வீக மணம் கமழுகிறது. அங்கேயே கோவில் கட்டுவோம் ' ' என்றான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டினான் பட்டி. உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான். கோவிலுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்தான். தங்கக் கட்டிகளையும் ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகள் நடந்து ஏராளமான வருஷங்கள் கழிந்தபோது உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை. அப்போது ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து ஒரு பிராமணன் வந்தான். அவன் அயோத்திக் கோவிலில் பூசை செய்து வந்தவன். அயோத்தியில் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடிபெயர விரும்பினான். அப்போது அவன் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். 'என் கோவிலுக்கு வா ' என அழைத்தாள். அதனால் அவனும் இங்கு வந்தான்.

உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் அயோத்தி பிராமணனை அக்கோவிலின் பூசாரியாக நியமித்தனர். கோவிலையும் சரிசெய்தார்கள். அவனும் மூன்றுவேளைப் பூசையைப் பக்தியோடு செய்ய ஒப்புக்கொண்டான். அப்படியே அவன் பூசை செய்துவந்தான்.

அயோத்தி நம்பியானுக்கு ஏழு பெண் மக்கள் இருந்தனர். ஏழு பேருமே திருமணத்திற்குரிய வயதை எட்டியிருந்தனர். ஆனால் அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க வசதியில்லை. அவனுடைய ஏழ்மை அவனை வதைத்தது. அவன் தினமும் பூசையின்போது உச்சினி தேவியிடம் ' 'அம்மா என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய உதவி செய் ' ' என உருகி வேண்டிக்கொள்ளுவான். ஒருநாள் காளி அவன் கனவில் தோன்றினாள். கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது. எடுத்துக்கொள். உன் புதல்விகளுக்குத் திருமணம் செய்துகொள் ' ' என்றாள்.

நம்பியான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்றான். அந்த இடத்தில் மண்ணைத் தோண்டினான். தங்கக்கட்டி கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்றான். தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லவேண்டும். பின் மகளுக்கு திருமணம் நடத்தவேண்டும் என்பது நம்பியானின் ஆசை.

ஆனால் அவனுக்கு அவ்வளவு பொன்னை எங்கு எப்படி விற்பதென்று தெரியவில்லை. ஆகவே அவன் அந்த நகரத்து வீதியில் தங்கக் கட்டியை விற்பதற்கு அலைந்தான். அவ்வளவு பெரிய கட்டியை விலைகொடுத்து வாங்க அங்கே யாருமில்லை. அப்போது பிராமணன் நின்ற வீதிவழி வெள்ளைக்கார அதிகாரி ஒருவன் குதிரையில் வந்தான். அவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என்றான். நம்பியானைச் சோதனை செய்தான். பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். அவன் திருடனோ என்ற ஐயம் அதிகாரிக்கு ஏற்பட்டது.

வெள்ளைக்கார அதிகாரி பிராமணனைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் அவனுக்கு வந்த வரலாற்றைக் கேட்டான். நம்பியான் அழுதபடி நடந்ததைக் கூறினான் . வெள்ளைக்காரன் அதை சோதனை செய்ய நம்பியானை கோவிலுக்கு அழைத்துச் சென்றான் . அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது

அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக்கொள்ள வெள்ளைக்காரன் ஆசைப்பட்டான். தன் கீழே உள்ள வீரர்களை¢க கோவிலைத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான். வீரர்கள் கோவிலை வளைத்தனர். அப்போது காளி பேய்ப்படைகளை வெள்ளைக்காரர்களின் மேல் ஏவினாள். பேய்ப்படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி வெள்ளை வீரர்களை வளைத்தன. அவை மாயமாய் நின்றுகொண்டு அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. வெள்ளை அதிகாரியும் படைகளும் அஞ்சி அலறி கோவிலை விட்டு ஓடினார்கள்

நம்பியான் காளியை வணங்கினான். அவன் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது. கோவிலை புதுப்பித்து பூசை செய்தார்கள்

Monday, May 23, 2016

அம்மன் வரலாறு

பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் 16 வயது நிரம்பிய கண்ணி பெண்ணால் எனக்கு அழிவு ஏற்படும் வகையில் வரம் தர வேண்டும் என்று கூறினான். பிரம்மாவும் அப்படியே தந்தேன் என்று கூறி மறைந்தார். அதன்பிறகு தரிகாசுரனும் உலகத்தில் உள்ளவர்கள் என்னையே வணங்க வேண்டும் சிவனை வணங்க கூடாது என்று அனைவரையும் கொடுமை படுத்தினான். இதை பார்த்த தேவர்கள் அனைவரும் சிவன் மகாவிஷ்ணு பிரம்மா இவர்களிடம் வணங்கி முறையிட்டார்கள் மகா விஷ்ணுவும் தேவர்களை பார்த்து தரிகாசுரனை அழிக்க யாராலும் முடியாது ஆண் முகத்தை பார்க்காமல் 16 வயது கன்னி பெண் ஒருவரால் தான் அரக்கனை அழிக்க முடியும் என்று கூறி பார்வதியை அழைத்து நீ குழந்தையே குறிஞ்சி காட்டில் ஆண் வாடையே இல்லாமல் இருக்கும் பிரம்மாராஸாசசி அவர்களுடைய வளர்ப்பு குழந்தையாக 16 வருடங்கள் வளர்ந்து வா 16 வருடங்கள் கழித்து தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவனை அழைத்து வந்து நடு இரவு 12 மணிக்கு விடியும் முன் சிவ பார்வதி திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்று கூறி குறிஞ்சி காட்டிற்கு அனுப்பி வைத்தார். தரிகாசுரனின் அட்டகாசம் அதிகரித்து தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை படுத்தி வந்தான். 16 வருடங்கள் கழித்து தேவர்கள் அனைவரும் மகாவிஷ்னுவிடம் சென்று முறையிட்டார்கள். மகாவிஷ்னுவும் தேவர்களை அழைத்து குறிஞ்சி மலை காட்டில் பார்வதி வளர்ந்து 16 ஆண்டு ஆகிவிட்டது. சிவபார்வதி திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி சிவனையும் தேவர்களையும் அழைத்து கொண்டு குறிஞ்சி மலை காட்டுக்கு சென்றார்கள். அதை பார்த்த நாரதர் அரக்கன் தரிகாசுரனிடம் சென்று உலகத்திலெயெ அழிக வாய்ந்த பெண் குறிஞ்சி காட்டில் இருக்கிறார்கள் அவர்களை சிவனுக்கு திருமணம் செய்ய தேவர்கள் அனைவரும் போய் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினர். அப்படியா அந்த சிவனுக்கு திருமணமா அதற்கு முன் நான் சென்று அந்த பெண்ணை சிறை எடுத்து வருகிறேன் என்று கூறி சென்றான். குறிஞ்சி மலை காட்டில் பார்வதி 16 ஆண்டுகள் இன்று முடிந்து விட்டது. சிவனும் தேவர்களும் இன்று திருமணம் செய்ய வருவார்கள் என்று சந்தோஷத்துடன் காத்து இருந்தார். அப்பொழுது நாரதர் சேவல் அவதாரம் எடுத்து குறிஞ்சி மலை காட்டில் கூவினர். இதை பார்த்த பார்வதி விடியும் முன் வருவேன் 12 மணிக்கு திருமணம் செய்வேன் என்று சிவன் என்னை ஏமாற்றி விட்டார் என்று கோபமாக செல்கிறார் அந்த வழியாக வந்த தரிகாசுரன் இவ்வளவு அழகு நிறைந்த பெண்ணை பார்த்ததில்லை என்று பார்வதியை நெருங்கி வந்தான் பார்வதியும் தரிகாசுரனை பார்த்து டேய் மதிகெட்ட அரக்கா நீ வாங்கிய வரத்தை நினைத்து பார் என்று கூறினர் அரக்கன் அதை உணராமல் பார்வதியை நெருங்கினான் பார்வதியும் கோபமாக அரக்கனை சூலத்தால் குத்தினார் அரக்கன் உடம்பில் இருந்து ரத்தம் வெளியே வந்து ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒவ்வொரு அரக்கன் உருவாகினான். இதை பார்த்த பார்வதி காட்டேரியாக அவதாரம் எடுத்து அரக்கன் உடம்பில் உள்ள மொத்த ரத்தத்தையும் குடித்து அரக்கன் தலைகளை மாலையாக அணிந்து உடல்களை ஆடையாக அணிந்து ஓம் காளியாக விஸ்ருபமாக நின்றார். இதனால் பூமி அதிர்ந்து பூமியின் பாரம் தாங்காமல் பூமாதேவி பூமியை விட்டு வெளியே வந்தார் அதை பார்த்த நாகசக்தி பூமா தேவிக்கு கொடையாக மாறி ஓம்காளியாக நின்ற அம்மனை ஆராதனை செய்தார்கள் தேவர்களும் அன்னையை பொற்றி அய்யனே போற்றி என்று வர்ஸித்தார்கள் காளியும் தன்னுடைய நெற்றி கண்ணை சிவனுக்கு கொடுத்து சாந்தமாக காட்சி தந்தார்.

முத்தாரம்மன் வரலாறு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. பல்வேறு இன மக்களுக்கு முத்தாரம்மன் குலதெய்வமாக இருக்கிறாள். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள குலசேகரப்பட்டணத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சம்பு என்ற தீவுக்கப்பால் ஏழு கடல் தாண்டி, கமலை என்ற சுனை அருகே மாணிக்கத்தால் ஆன புற்று ஒன்று இருந்தது. அதில் ஐந்து தலை நாகம் ஒன்று பல காலம் வாழ்ந்து வந்தது. அந் நாகம் பல காலம் சேமித்து வைத்த விஷமானது ஒரு அமுதக் கலசமாக மாறியிருந்தது. ஒரு நாள் அந் நாகம் தன் வயிற்றிலிருந்த கலசத்தை ஈன்றெடுத்தது. விஷத்தன்மை கொண்ட அந்த ஐந்து தலை நாகம் ஈன்றெடுத்த கலசத்திலிருந்து ஏழு அரக்கியர்கள் தோன்றினர்.

ஏழு அரக்கியர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. அரக்கியர் எழுவருக்கும் நீலன், குமுதன், ஆதித்தன் என்ற மூன்று மக்கள் பிறந்தனர். அரக்கியர் பூமியில் தோன்றிய காரணம் முடிந்ததும் தம் மக்கள் மூவரையும் ஒரு வனத்தில் விட்டு விட்டு மறைந்தனர். அந்த வனத்தில் மூன்று குழந்தைகளும் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்தனர்.

அவ் வனத்தில் சக்தி முனி என்பவன் யாகம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்த யாகத்தில் வெளிப்பட்ட புகை விண்ணுலகத்தையே திக்குமுக்காடச் செய்தது. தேவர்களால் அந்தப் புகையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் பார்வதியிடம் முறையிட பார்வதியும் வனத்திற்குப் புறப்பட்டு வந்தாள். அந்த யாகத்தையும் அதில் வெளிப்படும் புகையையும் அடக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டாள் பார்வதி. அப்போது பார்வதியின் நெற்றியில் வியர்வை அரும்பியது. அதை வழித்துக் கீழே விட்டாள் பார்வதி. அந்த வியர்வை முத்து பூமியில் விழுந்தது. அதிலிருந்து முத்தாரம்மன் தோன்றினாள். அந்த முத்தாரம்மனை, அநாதையாய்க் காட்டில் திரியும் அரக்கியரின் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினாள் பார்வதி. பார்வதியின் கட்டளையின்படி முத்தாரம்மன் புறப்பட்டாள்.


நீலன், குமுதன், ஆதித்தன் ஆகிய மூன்று குழந்தைகளும் அநாதையாய்த் திரிவதைக் கண்டுபிடித்தாள் முத்தாரம்மன். பிறகு அவர்களை வைத்துக் காக்க வேண்டி, காண்டாபுரம் என்ற வனத்தை அழித்து அதில் முப்புரக் கோட்டை ஒன்றை அமைத்தாள். அதில் தன் குழந்தைகளான மூவரையும் வைத்து வளர்த்தாள் முத்தாரம்மன். அந்த மூவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தாள் முத்தாரம்மன்.

நீலன், குமுதன், ஆதித்தன் என்கிற மூன்று பேருக்கும் சந்தவாழ்குமரன், முத்துத்தம்பி, முத்துக்குமரன் ஆகிய மக்கள் மூவர் பிறந்தனர். முத்தாரம்மனின் மூன்று பேரன்களும் வளர்ந்து பெரியவர்களாயினர். தங்களின் செல்வாக்கு, சக்தி அனைத்தும் அவர்களுக்குப் புரியத் தொடங்கியதும் யாருக்கும் பயப்படாமல் செயல்பட்டனர். 'அரக்கத்'தனமான குணம் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அதன் விளைவால் தேவர்களை வெறுக்கத் தொடங்கினர். தேவர்களின் யாகம், அவர்களின் போக்கு எல்லாவற்றையும் எதிர்த்தனர். மூன்று பேரின் தகப்பன்களும் தம் மக்களுக்கு உதவினர். தேவர்களால் முத்தாரம்மன் பேரப்பிள்ளைகளின் செயல்களைத் தாங்க முடியவில்லை. திருமாலிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். திருமால் மூவரையும் அழிக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. இறுதியில் திருமால் கையை விரித்துவிட்டார்.

தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களுக்கு அபயம் அளிப்பதாகச் சிவபெருமானும் வாக்களித்தார். தற்காலிகமான மன நிம்மதியோடு தேவர்கள் கலைந்தனர். முத்தாரம்மன் பேரன்கள் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து அவர்களை அழிக்கச் சிவன் வந்தார். சிவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் முத்தாரம்மனும், அவளது மகன்கள், பேரன்கள் அனைவரும் சிவனின் காலில் விழுந்து வணங்கினர். வந்த காரியத்தை மறந்த சிவன் கையிலிருந்த சூலத்தைக் கீழே போட்டுக் கைகொட்டிச் சிரித்தார். உடனே முப்புரமும் எரிந்து சாம்பலானது. அதில் முத்தாரம்மன் தவிர மற்றவர்கள் எரிந்து சாம்பலாயினர். முத்தாரம்மன் கடும் கோபம் கொண்டு தம் மக்களான நீலன், குமுதன், ஆதித்தன் மூவரையும் உயிர்த்தெழச் செய்தாள்.

சிவனிடம் சென்று அவர் செய்த கொலைக்காகத் தனக்கும் தன் மக்களுக்கும் கோடி வரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். சிவனும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். தம் மகன்கள் தவிர, இப் பூவுலக மக்களையும் காக்கப் பல வரங்கள் பெற்றாள். பிறகு ஒரு வண்டியில் தன் மகன்களுடன் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு நல்ல வரங்கள் அளித்து வந்தாள். பின்னர் தன் சக்தியை அங்கங்கு விட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறாள் முத்தாரம்மன் என்று சொல்லப்படுகிறது.